Wednesday, December 30, 2015

பின் வாங்கும் திராவிட அரசியல் போக்கிற்கு முன்னுதாரணமாக பாரதி?

வழிபாட்டுப் புழுதிப் புயலில் சிக்கிய தமிழ்நாடு    ---  செ. அ. வீரபாண்டியன்


செ.அ. வீரபாண்டியன்: pannpandi@yahoo.co.in

மார்க்ஸ், லெனின், மாவோ, காந்தி, பெரியார், அம்பேத்கார் முதல் பாரதி, முத்துராமலிங்கத் தேவர் வரை அந்த வழிபாட்டுப் புழுதிப் புயலில் சிக்காதத் தலைவர்களே இல்லை எனும் அளவுக்கு தமிழ்நாடு உள்ளது. 

வழிபாட்டுப் புழுதியில் பாரதி சிக்கியதால் ஏற்பட்ட பாதிப்புகளை முதலில் பார்ப்போம்.
பாரதியின் கவிதைகளில் உள்ள இலக்கண அடிப்படையிலான குறைபாடுகள் பற்றி 1950களில் ஒரு புத்தகம் வெளிவந்து,  இன்று தேடினாலும் கிடைக்காத அளவுக்கு இருட்டில் உள்ளது. அவ்வாறு புத்தகம் எழுதியது தவறா? அல்லது அதை விவாதிக்காமல் , இருட்டில் சிக்க வைத்தது தவறா? பாரதியின் வழிபாட்டுப் புழுதியில்,  ஒரு அறிவுபூர்வமான விவாதத்திற்கு இடம் கிடையாதா? அந்த போக்கு தான் இன்றைய எழுத்தாளர்கள் இலக்கண விதிகளை மதிக்காமல் எழுதுவதற்கு ( திரு. முருகனின் 'மொழிப் பார்வைகள்') வித்திட்டதா?

தமிழில் இலக்கணக் குறைபாடுகளுடன் கவிதைகள் எழுதி, அக்குறைகளைக் கண்டு கொள்ளாமல் பாராட்டும் போக்கும் பாரதியில் தான் துவங்கியதா என்பது ஆராயப்பட வேண்டும். 

ஒரு 'தலித்'த்த்ற்கு 'பூணூல்' அணிவித்து, 'பிராமணனாகி விட்டாய்' என்று அறிவித்த பாரதி, தனது மகளுக்கு மாப்பிள்ளை தேடி, மணமுடித்த வேளையில், 'பொறுப்புள்ள பிராமண தந்தையாக' நடந்தது முரண்பாடில்லையா? என்பதும் ஆய்விற்குரியதாகும். பாரதியின் படைப்புகள் எந்த காலக் கட்டத்தில், எந்த‌ சமுக அரசியல் சூழலில் செல்வாக்கு பெற்று வளர்ந்தது, அதற்கு யார் யார் என்னென்ன காரணங்களுக்காக பங்களிப்பு வழங்கினார்கள் என்பதும் ஆய்விற்குரியதாகும்.

உணர்வுபூர்வகாற்றிலேயே தான் வழிபாட்டுப் புழுதி வலிமை பெற்று வளர்கிறது என்பது பற்றி அடுத்து பார்ப்போம்.

"நாம் இப்படியே எவ்வளவு காலம் பேசிக் கொண்டிருக்கிறோம்? தனித்தமிழ்நாடுக்கு எப்போது முயற்சி செய்யப் போகிறோம்?" என்று, நான் பெரியார் இயக்கத்தில் இருந்த சமயம், ஒரு 'தோழர்' அடிக்கடி – ‘தனித் தமிழ்நாடு’ உணர்வுபூர்வ போதையில் - என்னிடம் கேட்பார். ராஜிவ் கொலைக்குப் பின், 'ராஜிவ் கொலையும், சதிகளும்' புத்தகம் வெளியிட்டு, மத்திய, மாநில உளவுத் துறையினர் 'அடிக்கடி' என்னையும், மற்ற திருச்சி பெரியார் மையத் தோழர்களையும் விசாரிக்க ஆரம்பித்த பின், அவர் பெரியார் இயக்கத்தை விட்டே ஒதுங்கி விட்டார். அந்த சமயத்தில் தஞ்சை வ‌ந்திருந்த ஜெயகாந்தனைச் சந்தித்து, அந்த புத்தகத்தை நான் கொடுத்தேன். தலைப்பைப் பார்த்து, அதை வாங்க மறுத்து விட்டார். மத்திய அரசு தொடர்பான‌ நெருக்கடி நிலை, தடா, பொடா உள்ளிட்டு எந்த அநீதியையும் எதிர்க்காத‌  'புத்திசாலித்தனமான முற்போக்கு' எழுத்தாளர் அவர். தமிழ்நாட்டில் பாரதி வழிபாட்டு புழுதிப் புயலுக்கான, உணர்வுபூர்வ போதைக் காற்றை உருவாக்கியவர்களில் முதலிடம் வகிப்பவர் அவர்.ஜெயகாந்தன் உள்ளிட்டு எந்த எழுத்தாளராவது தமிழின் மரணப் பயணத்தைக் குறித்து எழுதியிருக்கிறர்களா? தமது பிழைப்பிற்கான சமூக வட்டத்தில் உள்ளவர்களின் தவறுகளையும் இழிவுகளையும் பற்றி மெளனமாக இருந்து, உலகில் நடக்கும் 'கொடுமைகள்' பற்றி எழுதுவது 'முதலைக் கண்ணீர்' ஆகாதா? அத்தகையோரே தமிழின் மரணப் பயணத்தைப் பற்றி இதுவரை எழுதாதவர்களா? என்ற கேள்விகளும் ஆய்விற்குரியதாகும். அடுத்து பாரதிக்கும், அண்ணாவுக்கும் உள்ள ஒரு ஒற்றுமையைப் பார்ப்போம். 

பிரிவினைத் தடைச் சட்டம் வரப் போகிறது என்று தெரிந்தவுடன், தி.மு.க பொதுக்குழுவில் பெரும்பாலான உறுப்பினர்கள் கருத்துக்கு எதிராக, 'பிரிவினையைக் கைவிடுகிறேன்; பிரிவினைக்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன' என்று அறிவித்தார் அண்ணா. (உணர்வுபூர்வ போதையில் சிக்கிய‌ 'தனி நாடு' முயற்சிகள் பற்றிய விளக்கத்திற்கு:‘தமிழரின் அடையாளச் சிக்கலும், தாழ்வு மனப்பான்மையும் (3)-'தனி நாடு' உண்மையில் தனி நாடா?’;http://tamilsdirection.blogspot.in/2013/11/normal-0-false-false-false-en-us-x-none_26.html ) 

காலனிய ஆட்சியை எதிர்த்து, இந்திய விடுதலைக்காக உணர்வுபூர்வமாக வீரமாக பேசியும் எழுதியும் வந்த பாரதி,'எதிர்ப்பைக் கை விடுகிறேன்' என்று புதுச்சேரியில் உளவுத் துறை அதிகாரியிடம் தெரிவித்துவிட்டு, கைது செய்ய மாட்டார்கள் என்று நம்பி, கடலூர் வந்து கைதுக்குள்ளானார். அதன்பின் சிறையில் இருந்து காலனிய அரசுக்கு ஒரு மடல் எழுதினார். அதில் " பிரிட்டிஷ் அரசுக்கு என்றும் விசுவாசமாகவும், சட்டத்திற்கு கட்டுப்பட்டவனாகவும் நான் இருப்பேன். எந்த வகையான அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடமாட்டேன். இதனை மீண்டும் மாட்சிமை மிக்க அரசுக்கு உறுதி கூறுகிறேன். எனவே மாட்சிமைமிக்க அரசு உடனே என்னை விடுதலை செய்யுமாறு மன்றாடுகிறேன்." என்று முடித்துள்ளார். (I once again assure your Execellency that I have renounced every form of politics, I shall ever be loyal to british Government and law abiding. I therefore beg of your Excellency to order my immediate release. May God grant your Excellency a long and happy life. I beg to remain
Your Excellency’s most obedient servant.
C. Subramania Bharathi) (முழு மடல் கீழே)

பின் விடுதலையாகி ஊருக்குத் திரும்பிய பாரதி ரவுலட் சட்டத்தையும் எதிர்க்க வில்லை; ஜாலியன்வாலா பாத் படுகொலையையும் கண்டிக்கவில்லை. பாரதி 'அரசியல் துறவு பூண்டதால்' அது தவறல்ல என்றும், மேற்குறிப்பிட்ட மடலை 'மன்னிப்பு' என்பதும், 'நிபந்தனையற்ற சரண்' என்பதும் பாரதியைக் கொச்சைப் படுத்துவதாகும் என்றும் இன்றும் பாரதி அன்பர்கள் வாதிடுகிறர்கள்.

பாரதியின் இறுதி ஊர்வலத்தில் மிகக் குறைவானவர்கள் கலந்து கொண்டதற்கு  அவர் காலனிய அரசு எதிர்ப்பைக் கைவிட்டதும் ஒரு காரணமா? என்பதும் ஆய்விற்குரியதே ஆகும்.

ஆக அண்ணா 'பிரிவினை அரசியல் துறவு' மேற்கொண்டதற்கு முன்னோடியாக பாரதி இருந்துள்ளார். எனவே உணர்வுபூர்வமாக வீரமாக பேசி விட்டு, எழுதி விட்டு, பின் நெருக்கடி வரும்போது பின் வாங்கும் திராவிட அரசியல் போக்கிற்கு முன்னுதாரணமாக பாரதி இருந்துள்ளார்."

Sunday, February 14, 2010

பாரதி’ ய ஜனதா பார்ட்டி

பாரதி’ ய ஜனதா பார்ட்டி

-வே.மதிமாறன்



“பாரதியின் வார்த்தைகள்-இல.கணேசனின் குரல்வளையாக, ராம.கோபாலனின் குரல் வளையாக காலத்தைத் தாண்டியும்-நம் காதுகளில் இன்னும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

ஆம், அந்தப் புரட்சிக்கவி பாரதி விரும்பிய மாற்றம் இதுதான், கேவலத்திலிருந்து கழிசடைக்கு மாறுவது.”


“காசி, நகர்ப் புலவர் பேசும் உரைதான்

காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்’ என்கிறார்.

இதை காவுக்கு கா போடுகிற, வெறும் கவிஞனின் மனோபாவம் என்று சுருக்கிவிட முடியாது. இந்திய நகரங்களை இணைத்துப் பார்க்கிற ஒரு தேசியக் கவியின் சிந்தனை என்று நீட்டி முழங்கவும் முடியாது. தேசிய கவிஞனாக மட்டும் இருந்தால்,

‘காஷ்மீர், நகர்ப் புலவர் பேசும் உரைதான்

கன்னியாகுமரியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்’

என்று பாடியிருக்க வேண்டும். ஆனால், பாரதியின் அந்த வரி, அப்பட்டமாக பல் இளிக்கும் பார்ப்பனியம்தானே.

சரி, மற்ற ஊர் புலவர்கள் பேசாத அளவுக்கு அப்படி என்ன, உலக மகா தத்துவத்தை காசியில் இருக்கிற புலவன் பேசிவிடப் போகிறான்? அப்படியே பேசினாலும் அதை உடனே காஞ்சிபுரத்துக்காரன் மட்டும் கேட்க வேண்டிய கட்டாயம் என்ன?

“வேற ஒண்ணுமில்லீங்க தோழர், காசியில் இருக்கிற வேதம் படிச்ச ‘பெரியவாளெல்’லாம், மார்க்சிய அடிப்படையில் புரட்சிகர திட்டங்களை வகுத்து, உடனடியாக காஞ்சிபுரத்து ஜெகத்குருக்களிடம் தெரிவித்தால் – ‘ஜகத்குரு’- லோகத்துக்கு அதைச் சொல்லி மக்களைப் புரட்சிக்கு உசுப்பி விடுவார்னு’ சொன்னாலும் சொல்வார்கள்-மார்க்சிய பாரதியவாதிகள்.”

***

‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி நூலுக்கு எதிராக வந்த நூல்கள்

பாரதி கடந்த நூற்றாண்டுக் கவிஞன் பற்றிய ஒரு மதிப்பீடு

-கி.பார்த்திபராஜா

தம்பி நான் ஏது செய்வேணடா?

பாரதி பற்றி பாரதிபுத்திரன்

இந்துத்துவக் காலச் சூழலின் மறுவாசிப்பில் பாரதியின் மெய்ஞ்ஞானம்

-ந.இரவீந்திரன்

***

பாரதி பக்தர்களின் கள்ள மவுனம்

-மருதையன்

-வே.மதிமாறன்



பாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகம் பற்றியான விமர்சனங்களுக்குப் பதில் சொல்லி வந்த புத்தகம்.

“பதவிகளைப் புறக்கணித்தல் சாத்தியமில்லை” என்று பாரதி கூறிய அதே காலகட்டத்தில்தான் பெரியார் காங்கிரசுக்குள் நுழைகிறார். நகராட்சித்தலைவர் பதவியைத்துறக்கிறார். நீதி மன்றத்தையும் அவர் புறக்கணித்தன் காரணமாக, வியாபாரத்தில் வரவேண்டிய ரூ.50,000 தொகையையும் இழக்கிறார்.

“வழக்கை வேறு பெயருக்கு மாற்றிக் கொடும்; நான் இனாமாகவே வாதாடி வசூலித்துத் தருகிறேன்” என்று சேலம் விஜயராகவாச்சாரியார் என்ற வக்கீல் சொன்னபோது, “அது நெறியற்ற செயல்” என்று நிராகரிக்கவும் செய்தார்.


“பாரதியின் நிலைபாடு முதிர்ச்சியடையவில்லை” என்று வருத்தப்படுகிறார் சிவதம்பி. அவனோ பார்ப்பன தேசியத்தின தீர்க்கத்தரிசியாகத் தன்னை நிரூபித்துக் கொள்கிறான். அவனுடைய உத்தரவுகளை நிறைவேற்றாமல் 80 ஆண்டுகளாகத் தூங்கிவிட்டு இப்போது அவசர அவசரமாகச சேரிகளுக்கு விஜயம் செய்யும் சங்கராச்சாரிதான், பாரதியுடன் ஒப்பிடும்போது தொலைநோக்கற்ற முண்டமாகத் தெரிகிறார்.

-மருதையன்


மேம்போக்காகப் பார்த்தால் சங்கராசச்£ரிகூட முற்போக்காகத்தான் தெரிவார். பிரச்சனைகளோடு வைத்து நெருக்கிப் பார்த்தால்தான், முற்போக்குப பேசுகிற பல பேர் உள்ளேயும் சங்கராச்சாரி ஒளிஞ்சிக்கிடு இருக்கிறது தெரிய வரும்.

அப்படி-மதமாற்றம், பார்ப்பனரல்லாததார் இயக்கம், சமஸ்கிருத எதிர்ப்பு, வேத எதிர்ப்பு எனறு பாரதியை நெருக்கிப் பிடித்தபோது. அவர் தொகாடியா, கிரிராஜ் கிஷோர் போல் பார்ப்பனரல்லாதா மக்களுக்குச் சூலம் கொடுக்கப் புறப்பட்டு விடுகிறார்.

நம் பேராசரியப் பெருமக்கள் ‘பாரதி சூலம் கொடுக்கவில்லை. கோயிலுக்கு சுண்ணாம்பு அடிக்கிறான்’ என்று அவரைப் பாதுகாக்கும் முயற்சியில், தங்களின் இந்து உணர்வை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். பாரதி சூலம் கொடுத்தால், இவர்கள் ராமன் கோயில் கட்ட செங்கல் கொடுக்கிறார்கள்.

-வே.மதிமாறன்





***